செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கைது!

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கைது!

0 minutes read

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் இன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரிடம் பல மணிநேரம் விசாரணை நடத்திய பின்னரே கைது இடம்பெற்றுள்ளது.

மேற்படி விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்குமாறு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்குக் கொழும்பு, மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. அத்துடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வாக்குமூலம் வழங்குவதற்காக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வந்திருந்தார். பல மணிநேர விசாரணையின் பின்னர் அவர் இன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More