செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் டெஸ்ட் போட்டியை குழப்பப்போவதாக சீக்கிய தீவிரவாதி மிரட்டல்

டெஸ்ட் போட்டியை குழப்பப்போவதாக சீக்கிய தீவிரவாதி மிரட்டல்

0 minutes read

இந்தியா இங்கிலாந்து அணிகளிற்கு இடையில் ராஞ்சியில் இடம்பெறவுள்ள நான்காவது டெஸ்ட்போட்டியை குழப்பப்போவதாக சீக்கிய தீவிரவாத தீவிரவாதியொருவர் எச்சரித்துள்ளதை தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக இந்திய அதிகாரிகள்  தெரிவித்;துள்ளனர்.

குர்பட்வன்ட்  சிங் பனூன் என்ற தீவிரவாதியே டெஸ்ட்போட்டியை குழப்பப்போவதாக எச்சரித்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவை தளமாக கொண்ட இவர் ராஞ்சி டெஸ்ட்போட்டியை குழப்புமாறு தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பிட் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூக ஊடகங்கள் மூலமாகவே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

நாளை நான்காவது டெஸ்ட்போட்டி ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே சீக்கிய தீவிரவாதியின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பனுன் 2019 முதல் இந்தியாவின் என்ஐஏயின் கண்காணிப்பில் இருந்து வருகின்றார்,2019 இவர் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More