புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் யுத்தம் இல்லாத உலகு வேண்டும் | பா.உதயன் 

யுத்தம் இல்லாத உலகு வேண்டும் | பா.உதயன் 

0 minutes read

யுத்தம் இல்லாத உலகு வேண்டும்
எல்லா மனிதனுக்கும் உணவு வேண்டும்
மானிடம் பேசும் மொழிகள் வேண்டும்
மனிதமும் அறமும் வாழ வேண்டும்

மனிதனை மனிதன் மதித்திட வேண்டும்
மண்ணில் எப்பவும் அமைதி வேண்டும்
பறவையும் குயிலும் பாடிட வேண்டும்
நீதியும் நியாயமும் நிலைத்திட வேண்டும்

அமைதியாய் உலகு சுழலுதல் வேண்டும்
அன்பும் கருணையும் பேசுதல் வேண்டும்
வலிகள் கடந்த வாழ்வு வேண்டும்
நிலையாய் எங்கும் நின்மதி வேண்டும்

எல்லா இருளும் கடக்க வேண்டும்
எங்குமே சூரியன் உதித்திட வேண்டும்
வானமே இறங்கி பேசுதல் வேண்டும்
மழையாய் பூமி நனைந்திட வேண்டும்

உலகுக்கு என்றும் அமைதி வேண்டும்
உண்மைப் பொருளை உணருதல் வேண்டும்
அன்பே சிவம் என்று அறிதல் வேண்டும்
அதுவே அறமாய் உலகம் வேண்டும்.

பா.உதயன் 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More