செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முதல் வெளிநாட்டு பயணமாக அநுரகுமார இந்தியாவுக்கு செல்ல திட்டம்

முதல் வெளிநாட்டு பயணமாக அநுரகுமார இந்தியாவுக்கு செல்ல திட்டம்

0 minutes read

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க தனது முதல் வெளிநாடு பயணமாக எங்கு செல்வார் என்பது இலங்கையில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடன் இலங்கை நெருக்கம் காட்டி வருகிறது. அத்துடன், அநுரகுமார திசநாயக்க சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவர் என தேர்தல் பிரசார சமயத்தில் பேச்சுக்கள் எழுந்தன.

இலங்கையில் இதற்கு முந்தைய ஜனாதிபதிகள் தங்கள் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கே வருகை தந்துள்ள நிலையில், அநுரகுமார திசநாயக்க இதே வழக்கத்தை பின்பற்றுவாரா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வருகை தர அநுரகுமார திசநாயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விடுத்த அழைப்பை அநுரகுமார திசநாயக்க ஏற்றுக்கொண்டதாகவ தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More