செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் காணாமல் போன பெண் ஆற்றிலிருந்து சடலமாக மீட்பு!

காணாமல் போன பெண் ஆற்றிலிருந்து சடலமாக மீட்பு!

1 minutes read

இம்மாதம் (ஒக்டோபர்) 1ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த பெண் ஒருவர், இங்கிலாந்து – டெர்வென்ட் ஆற்றில் (River Derwent) சடலமாக மீட்கப்பட்டார்.

34 வயதான விக்டோரியா டெய்லர் என்ற இளம் தாயே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

திருமதி டெய்லர், செப்டம்பர் 30ஆம் திகதியன்று அன்று வடக்கு யார்க்ஷயரில் உள்ள மால்டனில் உள்ள தனது வீட்டில் இருந்து காணாமல் போனார்.

அவர் காணாமல் போன ஒரு வாரத்திற்குப் பின்னர், ஆற்றுக்கு அருகிலுள்ள ஒரு விளையாட்டு பூங்காவை நோக்கி நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளை மீட்டெடுத்த பொலிஸார், அவர் ஆற்றில் இறங்கியிருக்கக் கூடும் என்று சந்தேகித்தனர்.

இதனையடுத்து அப்பகுதியில் தேடுதல் நடத்திய பொலிஸார், அந்தப் பகுதியில் அவரது உடைமைகள் பலவற்றைக் கண்டெடுத்தனர்.

தொடர்ந்து ஆற்றில் தேடுதல்கள் நடைபெற்றன. இதன்படி, டெய்லரின் உடைமைகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு அருகாமையில், ஆற்று நீருக்கடியில் தேடுதல் குழுக்களால் நேற்று செவ்வாய்கிழமை காலை 11.45 மணியளவில் ஒரு உடல் மீட்கப்பட்டதாக நார்த் யார்க்ஷயர் பொலிஸார் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More