செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் மட்டுவிலில் மலர்ந்த குரல் | அன்பில் டனுஷன்

மட்டுவிலில் மலர்ந்த குரல் | அன்பில் டனுஷன்

0 minutes read

குரல் ஒன்று மட்டுவில் மலர்ந்தது
திரள் ஒன்று கண்டது போரில்
வறல் நிலத்தின் முத்து இது
வன்னியினை காத்த சொத்து இது
தாய்க்கு தெரியவில்லைதான் சுமப்பது
கருவை அல்ல மாறாக
ஆதி தொட்ட தமிழனின்
குரல் நெருப்பை என்று

புலர்ந்தது தேசம் எனினும்
அவன் மறக்கவில்லை
தன் தமிழரின் நேசத்தை
கண்டான் கற்றான் எழுதினான்
வந்தான் ஒலித்தான்
தேசத்தின் குரலாக

பிழையெனில் பிள்ளை கொள்ளும் வீரம்
அவனையும் விட வில்லை
விமர்சித்தான் திம்புவில்
விடுதலை நெருப்புகளின் ஆடம்பரத்தை !

இணைந்தான் தாதிய வெண் சிலையோடு
புனைந்தான் பல வெற்றி தைகள் அவளோடு

அடேலின் அன்பிற்க்கு உரியவன் இவன்
அழுகின்ற வாய்களுக்கு உரிய குரலும் இவன்

குமரியின் எச்சத்தினை 
கூவித்திருந்த குயில் இவன்
சாய்ந்த இலைகள் சலனத்துக்கு அஞ்சுவதில்லை
மாய்ந்த இவன் குரலும் !

*18 வருட நினைவு அஞ்சலி !

-அன்பில் டனுஷன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.