செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இறுதிச் சடங்கு நிகழ்வில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை!

இறுதிச் சடங்கு நிகழ்வில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை!

0 minutes read

இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை – சிகிரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேன்வலயகம, கிம்பிஸ்ஸ பகுதியில் நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வு ஒன்றில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் கிம்பிஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஹேன்வலயகம, கிம்பிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய நபரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

கொலை செய்யப்பட்டவருக்கும் சந்தேகநபருக்கும் இடையே சிறிது காலமாக நிலவிய தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சிகிரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More