செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ்ப்பாண ஆலயத்தில் குளவிக்கொட்டி முதியவர் பலி !

யாழ்ப்பாண ஆலயத்தில் குளவிக்கொட்டி முதியவர் பலி !

0 minutes read

யாழ்ப்பாணம், ஊரெழு அம்மன் ஆலயத்தின் மணிக்கூட்டு குளவிக்கூடு கலைந்து குளவி கொட்டியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

ஊரெழுவைச் சேர்ந்த ஐயாத்துரை அருந்தவராஜா (வயது-63) என்ற முதியவரே உயிரிழந்தார்.

சம்பவ இடத்துக்கு கோப்பாய் பொலிஸார் சென்ற போது அவர்களையும் குளவி துரத்தியதால், உடனடியாகவே அங்கிருந்து வெளியேறினர்.

அதன் பின்னர் யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்பு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது. குளவியைக் கலைப்பதற்கு எரிவாயு நிரப்பவேண்டும் என்பதால் தீயணைப்பு படை சம்பவ இடத்துக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More