செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் கடல் மகள் | தீபச்செல்வன் கவிதை

கடல் மகள் | தீபச்செல்வன் கவிதை

1 minutes read

தாமரைபோல் விரியும் அலைகளை
கண்களில் கொண்ட கடற்கன்னி
தம்மை விடவும்
வேகமாய் நீந்தி புன்னகையுடன்
வெடிக்கையில்
கலங்கின மீன்கள்

யாருக்கும் அஞ்சா ஈழக் கடலே
ஓர் ஏழைத் தாய் பெற்ற வீர மகள்
உனக்காய் வெடிசுமந்தாள்
உன்னில் புதைந்தாள்
புத்திர சோகத்தால் உடைந்த தசரதன்போல்
விம்மிற்றுக் காங்கேசன்துறை

தீவை விழுங்க வந்த பருந்தின்
கால்களை முறித்தாள் அங்கயற்கண்ணி
தாயாய் உருகியது வேலணை

இலக்கை தகர்க்காது
திரும்பேன் எனப் போர்க்கோலம் பூண்டவள்
கடலோடு கலந்துபோகையில்
சீறிய அலைகளும்
கரைந்து புரண்டன

நுணலை விழுங்கும் சர்ப்பம்போல
கடலினை குடிக்க வந்த எதிரியின் படகை
கரைத்து
கடலுக்கு முத்தமிட்டாள் அங்கயற்கண்ணி
கடல் அணைத்தது தன் மகளை.

தீபச்செல்வன்

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More