10
உன் இயல்புகள்
அத்தனையும்
என் ஆயுளை
வலுப்படுத்துகின்றன
நீ
என்ன
அத்தனை அழகோ
சே” சே ”
நீ என் தூரிகை
மட்டுமே
ஏன் என்கிறாயா ?
ம்…
உன் வெட்கத்தை
அல்லவா பாதுகாக்க
முடிகிறது
அதை விட
என் சிந்தையின்
செயல் வடிவம்
உன்னால் தானே
உயிர் கொள்கின்றது
ஆகவே தான்
நீ இன்னும்
என்னுள்
மலர்ந்து
கொண்டிருக்கின்றாய்,
தே.பிரியன்