செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மகாவலி கங்கையில் காணாமல்போன இருவரும் சடலங்களாக மீட்பு ….

மகாவலி கங்கையில் காணாமல்போன இருவரும் சடலங்களாக மீட்பு ….

1 minutes read

திருகோணமலை – கிண்ணியா மகாவலி கங்கையில் காணாமல்போன இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.வயல்வௌியில் காவலில் ஈடுபட்டிருந்த 19, 29, 31 மற்றும் 39 வயதுடைய நால்வர் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிய போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வழமையாக தரை வழியாக செல்பவர்கள் சீரற்ற வானிலை காரணமாக படகில் மூலம் தொழிலுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் பயணித்த படகு கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

படகில் சென்றவர்களில் ஒருவர் நீந்தி கரையேறியதுடன் மற்றுமொருவர் அங்கிருந்த மீனவர்களால் காப்பாற்றப்பட்டிருந்தார்.

நீரில் மூழ்கியவர்களில் ஒருவரது சடலம் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More