செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு எப்படிப்பட்ட ஆடுகளமாக இருந்தாலும் சரி இந்திய அணி சிறப்பாக விளையாடும்- ரவி சாஸ்திரி

எப்படிப்பட்ட ஆடுகளமாக இருந்தாலும் சரி இந்திய அணி சிறப்பாக விளையாடும்- ரவி சாஸ்திரி

0 minutes read
ஆஸ்திரேலிய அணியை இந்திய மண்ணில் வீழ்த்திய கேப்டன் விராட் கோலி தலைமையிலான அணி அடுத்ததாக நியூஸிலாந்து அணியுடன்  மோத இருக்கிறது.
கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் அரை இறுதியில் இந்தியாவை நியூஸிலாந்து வீழ்த்தியது. அதற்கு பிறகு மீண்டும் இந்தியா – நியூஸிலாந்து சந்திக்கும் போட்டி இது என்பதால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸனுக்கு இந்தியாவிலும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் நியூஸிலாந்து தொடர் குறித்து பேசியுள்ள இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ”ஆஸ்திராலியாவுடனான முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் தொடர்ந்த ஆட்டங்களில் திறமையாக செயல்பட்டு வெற்றி பெற்றோம். நியூஸிலாந்து ஆடுகளம் இந்தியாவிற்கு சற்று சவாலாக இருக்கும் என்று கூறுகிறார்கள். எப்படிப்பட்ட ஆடுகளமாக இருந்தாலும் அதன் சூழலை புரிந்து கொண்டு இந்திய அணி சிறப்பாக விளையாடும். அணியில் ஷிகர் தவான் இல்லாதது கவலையளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More