இச்சந்தர்ப்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் எதிர்த்தரப்பு உறுப்பினர்களால் தாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவராஜா 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவை ஊடாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சபை பத்து நிமிடம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது அதன் பின்னர் ஆதன வரி குறைப்பு தொடர்பில் மூன்று மாதத்திற்குள் மக்களின் கருத்தறிவதற்காக வாக்கேடுக்கப்பட்டதுடன் சபை ஒத்திவைக்கப்பட்டது.