செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியது

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியது

1 minutes read

இலங்கைக்குள் மேலும் 5 கொரோன வைரஸ் தொற்றாளிகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட ஐந்து பேரில் நான்கு கொரோனா நோயாளர்கள் பேருவளையில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் புனாணி தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டுளள்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 203ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை கொரோன வைரஸ் தொற்றாளி ஒருவர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More