0
கொரோனா வைரஸ் பரவியுள்ளவர்களின் நடமாட்டம் மற்றும் வழித் தடங்களை எளிதில் அடையாளம் கண்டு, மக்களை உஷார் படுத்தும் புதிய தொழில் நுட்பத்தை அப்பிள் நிறுவனமும், கூகுள் நிறுவனமும் இணைந்து, உருவாக்கி வருகின்றன.
இதற்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்படும் புதிய செயலி, பொது சுகாதாரத்துறையின் அனுமதிக்குப் பின் எதிர்வருகிற மே மாதத்தில் உலகுக்கு அறிமுகம் செய்ய முடிவு செய்யப்படவுள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டுமென்ற உயரிய நோக்கத்திற்காக மிகப்பெரிய இவ்விரு நிறுவனங்களும் இணைந்து இப்பணியில் களமிறங்கியுள்ளன.
ஐ-போன் மற்றும் ஆண்ட்ரோய்ட் கையடக்க தொலைப்பேசிகளில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டால், அருகே கொரோனா வைரஸ் பரவியுள்ளவர்கள் யாராவது இருந்தால், நம்மை விலகி செல்லுமாறு அறிவுறுத்தும்.