முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியிலிருந்து பாரிய தொகை ஆயுதங்களை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை கொண்டே வனப்பகுதி ஒன்றிலிருந்து இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது 2 கைக்குண்டுகள், 2 ஆர்பிஜி தோட்டாக்கள், 60 மீற்றர்களை கொண்ட 5 மோட்டார்குண்டுகள், 81 மில்லிமீற்றர் ரக 2 மோட்டார் குண்டுகள் போன்றவை மீட்கப்பட்டுள்ளன.
இவை போர்க்காலத்தின் போது விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை விசேட அதிரடிப்படையினர் முல்லைத்தீவு பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.