இலங்கையில் மேலும் 10பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 970 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 960 பேர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 538 பேர் பூரண குணம் அடைந்துள்ளனர் என்பதுடன், 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.