உடல்நலக் குறைபாடு முதல் விஷப்பூச்சிகளின் கடி மற்றும் நம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை பாதுகாக்க போன்ற அனைத்து பிரச்சனைக்கு எளிய தீர்வுகள் இதோ,
சளித்தொல்லை உள்ளவர்கள் கொய்யாப் பழத்துண்டுகளில் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் விரைவில் குணமாகும்.
தேள் கடித்த இடத்தில் எலுமிச்சைப் பழத் துண்டுகளை வைத்து தேய்த்தால் அதன் விஷத்தின் வீரியம் குறைந்துவிடும்.
நெல்லிக்காய் கொட்டைகளை சேர்த்து அதை அரைத்து வடிகட்டி ஜூஸ் போல் செய்து குடித்து வந்தால் அதில் உள்ள விட்டமின் C நம் உடலுக்கு கிடைக்கும்.
இரத்தசோகை உள்ள குழந்தைகளுக்குத் தினமும் இரண்டு தேக்கரண்டி அளவு தேன் கொடுத்து வந்தால் ரத்தச்சோகை சீராகும்.
வீட்டில் வைக்கும் பொருட்களை கரையான் அரிக்காமல் இருக்க கற்பூரத்தைப் பொடி செய்து அதன் மீது தூவி வைக்க வேண்டும்.