இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழர்களில் ஒரு பகுதியினரும் பௌத்தர்களாக இருந்தனர். மேலும் பல தொல்பொருள் தலங்கள் இந்து தலங்களைப் போலவே சிங்கள மற்றும் தமிழ் பௌத்த பாரம்பரியங்களையும் பகிர்ந்து கொள்கின்றன.
தமிழில் உள்ள இலங்காதிலக கோயில் கல்வெட்டு, ஒரு தமிழ்வணிக சமூகம் கோயிலுக்கு அளித்த ஒரு ஆஸ்தியை பதிவு செய்கிறது, அதேபோல் ஜெத்தவனா மரம் தலத்திலும். ஐநூருவரின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன, அவை பௌத்த ஆலயங்களையும் இந்து கோவில்களையும் கட்டியதாகக் குறிப்பிடுகின்றன. ஜெயபாஹு 1, அதாவது கி.பி 1138 திகதியிட்ட ஜெயபாகு -1 இன் ஆட்சி க்காலத்தின் 28ஆவது ஆண்டில் திருகோண மலை மாவட்டத்தை அண்மித்த தம்பன் கடவை பகுதியில் உள்ள மொராக வேவிலிருந்து மற்றொரு தமிழ் கல்வெட்டு, நன்கொடையாளர் புத்தருக்கு நிலம் தருவதாகக் குறிப்பிடுகிறார், மேலும் மீறுபவர்கள் முண்டுருகோயிலால் (திரி ரத்னா மற்றும் முண்டுருவால் அழிக்கப்படுவார்கள் என்று அச்சுறுத்துகின்றனர் சேனைகளால், (மூன்று ஆயுதங்கள்) அதாவது வேளக்கார படையினரால் பொலநறுவையில் உள்ள புனித தாது நினைவுச்சின்னத்தின் கோயில் சிங்கள மன்னர்களால் பணியமர்த்தப்பட்ட வேளக்கார படையினரால் (தமிழ்) பாதுகாக்கப்பட்டதாக பொலநறுவை கல்வெட்டு கூறுகிறது.
திருகோணமலைக்கு வடக்கே சுமார் 58 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மயிலங்குளத்தில், தமிழ் கல்வெட்டு ஒன்றில், ஸ்ரீ ஜெயபாஹு மன்னர் விக்கிரம கால மேகனின் வேளக்காரரை வரவழைத்து விக்கிரம கால மேகன் பெரும்பள்ளியை (பெரிய கோயில்) அவர்களின் பாதுகாப்பில் வைத்தார் என்று குறிபிடப்பட்டுள்ளது. பவுத்த நிறுவனங்களின் பாதுகாப்பிலும், வணிகக் அமைப்புக்கள் மற்றும் அரசபடைகளுக்கும் இடையிலான சாத்தியமான உறவிலும் வேளக்கார படையின் ஈடுபாட்டை பொலநறுவை கல்வெட்டு வெளிப்படுத்துகிறது. இந்த கல்வெட்டில், பொலநறுவையில் உள்ள புனித தாது நினைவுச்சின்னத்தின் பெரிய பவுத்த ஆலயத்தை உண்மையாக பாதுகாக்க வேளகாரப்படையினர் சத்தியப்பிரமாணம் எடுத்துள்ளனர்…