செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பல்வேறு திருட்டை மேற்கொண்ட இருவர் சிக்கினர்

பல்வேறு திருட்டை மேற்கொண்ட இருவர் சிக்கினர்

1 minutes read

வவுனியாவில் பல்வேறு திருட்டுச்சம்பங்களுடன் தொடர்புடைய இருவரை வவுனியா தலைமை பொலிஸ்நிலைய குற்றத்தடுப்பு பொலிசார் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து திருடப்பட்ட ஆடுகள் மற்றும் மோட்டர்களை மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.

சமயபுரம் பகுதியில் நெல் அரைக்கும் ஆலை ஒன்றில் 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நான்கு மோட்டர்களை திருடிய குற்றச்சாட்டு மற்றும் காத்தார்சின்னக்குளம், ஆச்சிபுரம் பகுதிகளில் ஆடுகளை திருடிய குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து திருடப்பட்ட மோட்டர்களும், மூன்று ஆடுகளும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More