தேவையான பொருட்கள்:
அரிசி – 2 கப்
உளுந்து – அரை கப்
தூளாக்கிய கருப்பட்டி – ஒரு கப்
ஏலக்காய்தூள் – அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல் – கால் கப்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
அப்பசோடா – ஒரு சிட்டிகை.
செய்முறை:
* அரிசி, உளுந்தை தனித்தனியே ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
*உளுந்தை பொங்கப்பொங்கவும், அரிசியை மைபோலவும் அரைத்து, துளி உப்பு சேர்த்துப் புளிக்கவையுங்கள்.
* நன்குபுளித்த மாவில், தேங்காய் துருவல், நெய், ஏலக்காய்தூள், ஆப்பசோடா சேர்த்துக் கலக்குங்கள்.
* கருப்பட்டியை கால் கப் தண்ணீர் வைத்துக் கரையவிட்டு, வடிகட்டி, சூடாக அப்படியே மாவில்சேருங்கள்.
*இதை நன்கு கலந்து, இட்லிகளாக ஊற்றி, வேகவைத்தெடுங்கள். மிகவும் சுவையானஇட்லி
குறிப்பு :
மா அரைக்கும்போது, கெட்டியாக இருக்கவேண்டும். ஏனெனில், கருப்பட்டிப் பாகு சேர்த்ததும் மாவு நீர்த்துக்கொள்ளும். கருப்பட்டி கிடைக்காத பட்சத்தில் வெல்லத்தூள் சேர்த்தும்செய்யலாம்.
சுவஸ்த்திக்கா றெங்கராஜ்,