செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திருமலையில் இடம்பெற்ற நீதி கோரிய அமைதிப் போராட்டத்தில் சம்பந்தன் !

திருமலையில் இடம்பெற்ற நீதி கோரிய அமைதிப் போராட்டத்தில் சம்பந்தன் !

1 minutes read

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்கள் தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருகோணமலையிலும் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்துக்கு முன்பாக தங்களது உறவுகளுக்காக நீதி வேண்டி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் திருகோணமலை மாவட்ட சங்கத்தின் தலைவி உள்ளிட்ட பலரும் உறவுகளுக்காக தங்களது அமைதியான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த அமைதிவழி இடத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விரைந்து சென்று உரிய மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More