Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பெண்களின் கண்ணசைவில் இத்தனை அர்த்தமா? | தெரிந்தால் எதிர்காலம் இனிமையாகும்!

பெண்களின் கண்ணசைவில் இத்தனை அர்த்தமா? | தெரிந்தால் எதிர்காலம் இனிமையாகும்!

2 minutes read


பல மொழிகளை அறிந்தவர்கள் பலர் இருந்தாலும் கண்கள் பேசும் வார்த்தைகளை அறிய முடியாது. ஒருவருடைய‌ கண்களை வைத்தே அவர் என்ன கூற வருகிறார் என்பதை அறிந்து கொள்ளலாம். பெரும்பாலும் காதலிக்கும் போது பெண்கள் கண்களால் தான் அதிகம் பேசுவார்களாம்.

இது குறித்து அறிவியல் ரீதியாக சில உண்மைகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், கண்கள் பேசும் வார்த்தைகள் குறித்து அறிவியல் ரீதியாக குறிப்பிடப்பட்டுள்ள உண்மைகளையும் அறிந்து கொள்ளுங்கள்.

ஒருவருடன் பேசும்போது அல்லது பார்க்கும் போது கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது என்றும் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது என்றும் அர்த்தம். அவர் மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது, கண்கள் கீழே பார்த்தால் அடிபணிகிறது என்றும் அர்த்தப்படும்.

ஒருவருடன் பேசும்போது அல்லது பார்க்கும் போது கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது, ஆசைப்படுகிறது என்றும் கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது என்றும் அர்த்தம். கண்கள் கூர்ந்து பார்த்தால் விரும்புகின்றார். கண்கள் வேறு எங்கோ பார்த்தால் உங்களைத் தவிர்க்கிறது என்றும் அர்த்தப்படும்.

கண்களானது வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் அவர் பதட்மாக உள்ளார். கண்கள் படபடத்தால், வெட்கப்படுகிறது என்றும் அர்த்தம் . அத்து்டன் கண்கள் மூக்கைப்பார்த்தால் கோபப்படுகின்றார். கண்கள் கழுத்துக்கு கீழே பார்த்தால் காமம் என்றும் கண்கள் கண்ணுக்குள் பார்த்தால் காதல் என்றும் அர்த்தப்படுகின்றது.

கண்கள் இடப்பக்கமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது என்றும் கண்கள் இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை தேடுகிறது என்றும் அர்த்தமாம். இந்த நேரத்தில் உங்களை சுதாகரித்துக் கொள்வது அவசியம். கண்கள் வலது பக்கமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் யோசிக்கிறது என்றும், கண்கள் வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது என்றும் அர்த்தமாம். எதற்கும் தயாராக இருந்து கொள்ளுங்கள்.

ஒருவருடன் பேசும்போது அல்லது பார்க்கும் போது கண்கள் உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால் காம வயப்படுகிறது என்றும் கண்கள் ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் விரும்புகின்றார் என்றும் அர்த்தப்படுகின்றது.

ஒருவருடன் பேசும்போது அல்லது பார்க்கும் போது கண்கள் மூடித்திறந்தால் உள்ளுக்குள் எதையோ தேடுகிறது என்றும் கண்களை கைகள் மறைத்தால் எதையோ மறைக்கிறது என்றும் அர்த்தம். இதைக் கூட பலநாள் அறியாமல் இருந்துவிட்டோமே என்று யோசிக்கின்றீர்களா?

ஒருவருடன் பேசும்போது அல்லது பார்க்கும் போது கண்களை கைகள் கசக்கினால் தஞ்சம் கேட்கிறது என்றும் கண்கள் மூடித்திறந்தால் வெறுக்கிறது என்றும் அர்த்தமாம்.

ஒருவருடன் பேசும்போது அல்லது பார்க்கும் போது கண் புருவங்கள் உயர்ந்தால் பேச விரும்புகிறது என்றும் கண் புருவங்கள் சுருங்கினால் பேச விருப்பமில்லை என்றும் அர்த்தமாம். கண்களும் புருவங்களும் சேர்ந்து சுருங்கியிருந்தால் கோபம் என்றும் அர்த்தம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More