செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு இந்தியா – அவுஸ்ரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை!

இந்தியா – அவுஸ்ரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை!

1 minutes read

இந்தியா – அவுஸ்ரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பகல் இரவு போட்டியாக அடிலெய்டில் நாளை (வியாழக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரை அவுஸ்ரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி 20 இருபது தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

அடுத்து இரு அணிகள் இடையே 4 டெஸ்ட் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இந்திய அணி அவுஸ்ரேலியாவில் முதல் முறையாக பிங்க் பந்து (இளம் சிவப்பு) போட்டியில் விளையாடவுள்ளது. அதாவது முதல் முறையாக பகல் இரவு டெஸ்டில் விளையாடுகிறது.

ஒட்டு மொத்தத்தில் இந்திய அணி விளையாடும் 2-வது பகல் இரவு டெஸ்ட் ஆகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சொந்த மண்ணில் பங்களாதேஸ் அணிக்கெதிராக எதிராக பிங்க் நிற பந்தில் விளையாடிருந்தது.

இந்திய அணி அவுஸ்ரேலிய மண்ணில் ஒரே ஒரு முறைதான் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. 2018-19 ஆண்டில் விராட் கோலி தலைமையிலான அணி 4 டெஸ்ட் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதனால் தற்போதைய இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு நாடு திரும்புகிறார். இது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More