புகைப்படத் தொகுப்பு

Home சினிமா `இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ் சினிமாவில் நடப்பது மகிழ்ச்சி!’ – `அசுரன்’ குறித்து எழுத்தாளர் பூமணி

`இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ் சினிமாவில் நடப்பது மகிழ்ச்சி!’ – `அசுரன்’ குறித்து எழுத்தாளர் பூமணி

2 minutes read

பூமணி

பூமணி

‘அசுரன்’ திரைப்படம் பற்றி ‘வெக்கை’ நாவலாசிரியர் பூமணியிடம் பேசினோம். இந்த நாவலே, அப்படத்தின் மூலக்கதை.

தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் `அசுரன்’ திரைப்படம் நேற்று வெளியாகி உள்ளது. மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை மூலக்கதையாகக் கொண்டு இத்திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் நாவல், சிறுகதையைத் தழுவி மிகச் சில படங்களே வெளிவந்துள்ளன. 2016 ஆம் ஆண்டு எழுத்தாளர் சந்திரகுமாரின் `லாக்கப்’ நாவலைத் தழுவி, வெற்றிமாறன் இயக்கியிருந்த ‘விசாரணை’ திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அடுத்து சி.சு.செல்லப்பா எழுதிய `வாடிவாசல்’ நாவலைப் படமாக்கும் எண்ணம் இருப்பதாகவும் வெற்றிமாறன் பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.
பூமணி
பூமணி

பூமணி, தமிழின் மூத்த எழுத்தாளர். சாகித்ய அகாடமி விருது பெற்றவர். இவர் எழுதிய ‘வெக்கை’, ‘பிறகு’, ‘அஞ்ஞாடி’ உள்ளிட்ட நாவல்கள் வாசகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றன. `கருவேலம் பூக்கள்’ என்ற திரைப்படத்தையும் அவர் இயக்கியுள்ளார். தன் நாவல் படமாகியிருப்பது குறித்து அவரின் கருத்தை அறிய அவரைத் தொடர்புகொண்டோம்.

“தமிழ் சினிமாவில் நாவல்களைத் தழுவிப் படமெடுப்பது ஆரோக்கியமான விஷயமாகத்தான் பார்க்கிறேன். நான், நேற்று படம் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எந்த எழுத்தாளருக்குமே தனது நாவல் திரைப்படமாகும்போது, அதைப் பார்க்க ஆவலாகத்தான் இருக்கும். எனது நாவலில் திருத்தம் செய்துதான் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முயற்சிகள் தமிழ் சினிமாவில் நிகழ்வது, மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More