செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் சேவையில் நடிகை பிரணீதா

ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் சேவையில் நடிகை பிரணீதா

1 minutes read

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழை மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தினசரி வேலைக்குச் சென்று சம்பாதித்து தங்களது குடும்பங்களைக் காப்பாற்றுபவர்கள் நிலை மோசமாகவே உள்ளது.

ஊர் விட்டு ஊர் வந்து வேலை பார்த்தவர்களும் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நடிகர்கள், நடிகைகள் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

தமிழில் சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த கன்னட நடிகையான பிரணீதா சுபாஷ், ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் சேவையில் ஈடுபட்டுள்ளார். அவரது நேரடி மேற்பார்வையில் உணவுகளை சமைப்பது, பேக் செய்வது ஆகியவற்றைப் பார்த்து அவரும் அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார். ஒரு நாளைக்கு 75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குகிறார். பிரணீதாவின் இந்த சேவைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More