செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மகேஷ் பாபு அண்ணனுடன் ஒரே அறையில் தங்கியிருந்த பிரபல நடிகை

மகேஷ் பாபு அண்ணனுடன் ஒரே அறையில் தங்கியிருந்த பிரபல நடிகை

1 minutes read

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் நரேஷ். இவர் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரர் ஆவார். நரேஷுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமான நிலையில் ரம்யா ரகுபதி என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டர். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நரேஷ் – ரம்யா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட விரிசலுக்கு காரணம் நடிகை பவித்ரா லோகேஷ் தான் எனவும் நரேஷும் பவித்ரா லோகேஷும் திருமணம் செய்து கொள்ளபோவதாக தகவல் வெளியானது.

தெலுங்கு, கன்னட மொழி படங்களில் பிரபலமான நடிகையாக வலம் வரும் பவித்ரா லோகேஷ் சமீபத்தில் வெளியான வீட்ல விசேஷம் திரைப்படத்தில் நடிகை அபர்ணாவுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நரேஷும் பவித்ரா லோகேஷும் மைசூர் ஹூன்சூர் சாலையில் உள்ள பிரபல ஓட்டலில் ஒரே அறையில் தங்கியுள்ளனர். இதை தெரிந்துகொண்ட நரேஷின் மனைவி ரம்யா நள்ளிரவு நேரத்தில் அவர்களின் ஓட்டல் அறைக்கு சென்றுள்ளார்.

பின்னர் பலமுறை அறை கதவை தட்டியும் திறக்காத நிலையில் ரம்யா அறை வெளியே காத்திருந்துள்ளார். இதை தெரிந்து கொண்ட போலீசார் அங்கே வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நேற்று காலையில் நரேஷ் அறை கதவை திறந்து வெளியே வந்தபோது அவரை ரம்யா செருப்பால் அடிக்க பாய்ந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதை அடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More