செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பா ரஞ்சித்தின் ‘நட்சத்திரங்கள் நகர்கிறது’ திரைப்பட வெளியிட்டு திகதி அறிவிப்பு

பா ரஞ்சித்தின் ‘நட்சத்திரங்கள் நகர்கிறது’ திரைப்பட வெளியிட்டு திகதி அறிவிப்பு

1 minutes read

நடிகர் காளிதாஸ் ஜெயராம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘நட்சத்திரங்கள் நகர்கிறது’ என்ற திரைப்படத்தின் வெளியிட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தனித்துவமான படைப்புகளால் பிரத்யேகமான அடையாளத்தை பெற்றிருக்கும் படைப்பாளிகளில் ஒருவரான பா ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘நட்சத்திரங்கள் நகர்கிறது’.

இதில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘சர்பட்டா பரம்பரை’ பட புகழ் நடிகை துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கலையரசன், ஹரி கிருஷ்ணன், வினோத், சுபத்ரா ராபர்ட், ஷபீர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தென்மா இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை யாழி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்று அண்மையில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தில் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஓகஸ்ட் 31ஆம் திகதியன்று இந்த திரைப்படம் படமாளிகையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பா. ரஞ்சித் படைப்பு என்பதாலும் , தன்பாலின மற்றும் பாலின சிறுபான்மையினரிடையே ஏற்படும் காதலையும், உறவுகளையும் மையப்படுத்திய படைப்பு என்பதாலும், ‘நட்சத்திரங்கள் நகர்கிறது’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More