நடிகை திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது என்று தெரியவந்துள்ளது.
இளம் நடிகையாக வலம் வந்த ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா, தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
2012 இல் இந்திய இளைஞர் காங்கிரஸில் இணைந்த இவர் 2013 இல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரானார்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் திடீரென அவர் மாரடைப்பால் காலமானார் என்று ஒரு பொய்யான செய்தி பரவ தொடங்கியுள்ளது.
உண்மையை ஆராய்ந்தபோது, அவர் தற்போது அவர் ஜெனிவாவில் இருக்கிறார் என்றும், நிம்மதியாக தனது விடுமுறையை வெளிநாட்டில் கழித்து வருவதாக பத்திரிகையாளர் ஒருவர் தொலைபேசி மூலம் நடிகை திவ்யா ஸ்பந்தனாவை அழைத்து பேசியுள்ளார்.
இதனை பகிர்ந்து கொண்ட அவர், மேலும், இது பொய்யான செய்தி என்றும், யாரும் இந்த வதந்தியை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.