செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் ஸ்டஃப்டு பன்னீர் பப்பட்

ஸ்டஃப்டு பன்னீர் பப்பட்

1 minutes read

மாலை நேரத்தில் வீட்டில் இருப்பவர்களுக்கு வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் இதை செய்யலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மசாலா அப்பளம் – 10, உருளைக்கிழங்கு (பெரியது) – ஒன்று,
துருவிய பன்னீர் – 50 கிராம்,
கரம்மசாலாத்தூள் – ஒரு சிட்டிகை,
எலுமிச்சைச் சாறு – சிறிதளவு, பச்சை மிளகாய் விழுது, எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, துருவிக்கொள்ளவும்.

அத்துடன் உப்பு, துருவிய பன்னீர் துருவல், பச்சை மிளகாய் விழுது, கரம்மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து வைக்கவும்.

ஒவ்வொரு அப்பளத்தையும் தண்ணீரில் நனைத்து உடனே எடுத்து சுத்தமான துணியால் ஒற்றியெடுக்கவும்.
உருளைக்கிழங்கு கலவையில் சிறிதளவு எடுத்து அப்பளத்தின் ஒரு பக்கம் வைத்து மெதுவாக உருட்டி தண்ணீரை தொட்டு ஓரங்களை அழுத்தி ஒட்டவும். இதே போல் எல்லா அப்பளங்களையும் செய்யவும்.

எண்ணெயைக் காயவைத்து, உருட்டிய அப்பளங்களை அதில் போட்டு பொரித்தெடுக்கவும்.

சாஸ் உடன் சூடாகப் பரிமாறவும்.

சூப்பரான ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் ரெடி.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More