தேவையான பொருட்கள்:
மீனை ஊறவைக்க:
கொடுவாமீன் – 1/2 கிலோ
உப்பு – 1/2 தேக்கரண்டி
மிளகு – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
முட்டை – 1
சோளமாவு – 3 தேக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு
சில்லி மீன் செய்ய:
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
பூண்டு – நறுக்கியது
இஞ்சி – நறுக்கியது
வெங்காயம் – 1 கப் பெரிதாக நறுக்கியது
குடைமிளகாய் – 1 பெரிதாக நறுக்கியது
வினிகர் – 1 தேக்கரண்டி
சோயா சாஸ் – 1 1/2 தேக்கரண்டி
சில்லி சாஸ் – 2 மேசைக்கரண்டி
தக்காளி கெட்சப் – 2 மேசைக்கரண்டி
உப்பு – 1/4 தேக்கரண்டி
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
வெங்காயத்தாள் வெங்காயம்
வெங்காயத்தாள் கீரை
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
பழுத்த சிவப்பு மிளகாய் நறுக்கியது
செய்முறை:
மீனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும். அடுத்து மீனுடன், உப்பு, மிளகுதூள், மிளகாய் தூள், சோயா சாஸ் சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடம் ஊறவிடவும். பின்பு முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை தனித்தனியே பிரித்து, வெள்ளை கருவை மீனுடன் சேர்த்து கலந்துகொள்ளவும். அதனுடன் சோளமாவையும் சேர்த்து நன்கு கலந்து சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் 3 நிமிடம் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு, இஞ்சி, பெரிதாக நறுக்கிய வெங்காயம்,பெரிதாக நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். பிறகு வினிகர், சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி கெட்சப், உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவும்.அடுத்து வெங்காயத்தாள் வெங்காயம், வெங்காயத்தாள் கீரை சேர்த்து கலந்து கொள்ளவும்.சிறிதளவு தண்ணீர் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறிவிடவும். பிறகு இதில் நறுக்கிய சிவப்பு மிளகாய், பொரித்த மீன் சேர்த்து நன்கு கலந்து, இறுதியாக சிறிது வெங்காயத்தாள் கீரை சேர்த்து இறக்கினால். அருமையான சில்லி மீன் தயார்.
நன்றி -தினகரன்