செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் 15 நிமிடத்தில் செய்யலாம் இறால் சாதம்

15 நிமிடத்தில் செய்யலாம் இறால் சாதம்

2 minutes read

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வெரைட்டியான சாதம் கொடுத்து அனுப்ப விரும்பினால் இறால் சாதம் செய்து கொடுக்கலாம். இந்த ரெசிபி மிகவும் சுவையானது. செய்வதும் சுலபமானது.

தேவையான பொருட்கள் :

இறால் கால் – கிலோ முட்டை – 3
வடித்த சாதம்/பாசுமதி சாதம் – ஒரு கப்
பச்சை மிளகாய் – 3
பெரிய வெங்காயம் – 2
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
இஞ்சிபூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – தேவையான அளவு

செய்முறை :

இறாலை சுத்தம் செய்து கொள்ளவும்.

சாதத்தை உதிரியாக வடித்து ஆறவைத்து கொள்ளவும்.

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சுத்தம் செய்த இறாலை ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து அரை மணி நேரம் பிசிறி வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும்.

அடுத்து அதில் பிசிறி வைத்த இறால் கலவையும் சேர்த்து வதக்கவும்.

அடுத்து கரம் மசாலாத்தூள், மீதமுள்ள மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, 10 நிமிடம் தீயைக் குறைத்து இறாலை வேக விடவும்.

இறால் வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி, முட்டைக்குத் தேவையான உப்பு மட்டும் சேர்த்து முட்டையை இறாலுடன் சேர்த்து நன்கு கலக்கிவிட்டு வேகவிடவும்.

அடுத்து அதில் சாதத்தை சேர்த்து கலந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

தேவைப்பட்டால், மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

சூப்பரான இறால் சாதம் ரெடி.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More