செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா இலங்கையின் சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும்; அமெரிக்க தூதரம் எச்சரிக்கை

இலங்கையின் சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும்; அமெரிக்க தூதரம் எச்சரிக்கை

1 minutes read

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள அறுகம்பை பிரதேசம் உள்ளிட்ட பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக, அமெரிக்க தூதரம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்பை பகுதிக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்க பிரஜைகளை தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

ஏதேனும் சந்தேகத்துக்கு இடமான செயற்பாடுகள் அல்லது அவசர நிலை குறித்து 119 என்ற இலக்கத்துக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறு, தமது பிரஜைகளை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

us embassy report

இதேவேளை, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

எந்தவொரு சுற்றுலாப் பயணியும் தமது பாதுகாப்புத் தொடர்பில் 1997 என்ற இலக்கத்துக்குத் தகவல் வழங்க முடியும் எனவும் இலங்கை பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More