புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி | ஒருவர் கைது

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி | ஒருவர் கைது

0 minutes read

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி 13 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா மோசடி செய்ததாக கூறப்படும் பெண் ஒருவர் நாரஹேன்பிட்டி பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (14) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 05 பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

பெண் ஒருவர் வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு மூன்று முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இது தொடர்பான விசாரணைகளுக்காக குறித்த பெண் நேற்றைய தினம் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு எதிராக வெள்ளவத்தை, வாதுவை, மீகஹவத்த, ஹபராதுவை மற்றும் கிரியுல்ல ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரஹேன்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More