செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் கோடை காலத்தில் சருமம் வறட்சிக்கு இதை செய்யலாம்

கோடை காலத்தில் சருமம் வறட்சிக்கு இதை செய்யலாம்

1 minutes read

கோடை காலத்தில் சருமம் வறட்சிக்குள்ளாவது தவிர்க்க முடியாதது. சில நேரங்களில் வறண்ட சருமத்தால் எரிச்சல் ஏற்படும். சரும அரிப்பு, ஒவ்வாமை பிரச்சினைகளும் தலைதூக்கும்.

சருமம் மிருதுவாகவும், பொலிவு குறையாமலும் காட்சியளிக்க வெண்ணெய்யை பயன்படுத்தி வரலாம்.

அதனுடன் மேலும் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் சரும பளபளப்பை தக்க வைத்துக்கொள்ளலாம்.

* வாழைப்பழத்துடன் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். வெண்ணையை உருக்கியோ அல்லது திட நிலையிலோ பயன்படுத்தலாம்.

இந்த கலவையை ஒப்பனைக்கு பயன்படுத்தும் பிரஸ் மூலம் முகத்தில் மென்மையாக தடவ வேண்டும்.

10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மின்னும்.

* சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவதற்கு ரோஸ் வோட்டர் பயன்படுத்தலாம்.

ஒரு டேபிள்ஸ்பூன் ரோஸ் வொட்டருடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பசைபோல் நன்றாக குழைத்து முகத்தில் பூச வேண்டும்.

30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.

சருமம் ஒவ்வாமை பாதிப்புக்குள்ளாகி சிவப்பு நிறத்தில் காட்சி அளித்தால் வெள்ளரிக்காய் பயன்படுத்தி தீர்வு காணலாம்.

வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்து சாறு பிழிய வேண்டும்.

பின்னர் 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும்.

10 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.

– மகளீர் சஞ்சிகை –

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More