செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் பளபளக்கும் சருமம் பெற குறிப்புகள்

பளபளக்கும் சருமம் பெற குறிப்புகள்

1 minutes read

1. தயிருடன் சிறிது மஞ்சள் தூள் கலந்து, அவற்றை மாலை வேளைகளில் சருமத்தில் தடவி 20-30 நிமிடங்கள் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையை படிப்படியாக போக்கலாம்.

2. தக்காளியை வெட்டி, அதனை கருமையாக உள்ள கைகளில் தேய்த்து 15-20 நிமிடங்கள் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் அதில் உள்ள அமிலம் சருமத்தில் உள்ள கருமையை மறைக்கும்.

3. பாதாமை இரவில் படுக்கும்போது சிறிது பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை பால் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இச்செயலை தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு மென்மையாக இருக்கும்.

4. பப்பாளியில் சரும கருமையை போக்கும் பொருள் உள்ளது. எனவே பப்பாளியை அரைத்து அந்த பேஸ்ட்டை சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வர, கைகள் வெள்ளையாகும்.

5. மஞ்சள் தூளில் சம அளவு பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி, உலர வைத்து கழுவினால், வெயிலால் கருமையடைந்த கைகளை வெள்ளையாக்கலாம்.

6. கற்றாழை ஜெல்லை தினமும் சருமத்தில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், கருமையைப் போக்கி கைகளின் நிறத்தை அதிகரிக்கலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More