செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் தாமரைச்செல்வி சிறப்பிதழாக ஞானம் இலக்கிய இதழ்

தாமரைச்செல்வி சிறப்பிதழாக ஞானம் இலக்கிய இதழ்

1 minutes read

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகின்ற ஞானம் கலை இலக்கிய இதழின் மே மாத இதழானது வன்னியின் மூத்த எழுத்தாளர் தாமரைச்செல்வியை அதிதியாக கொண்டுள்ளது.

கடந்த பல தசாப்தங்களாக பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் இலக்கியப் படைப்புக்களை ஞானம் இதழ் வெளியிட்டு வருகின்றது. அத்துடன் அதில் தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்கள் அட்டைப்பட அதிதியாக கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மே மாத இதழானது, ஈழத்தின் குறிப்பிடத்தக்க மூத்த எழுத்தாளர் தாமரைச்செல்வியை அட்டைப்பட அதிதியாக கொண்டு வெளிவந்துள்ளது.

தன் சீர்மையான எழுத்துக்களின் வழியாக நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் தாமரைச்செல்வி, பச்சைவயல் கனவு, வன்னியாச்சி போன்ற புனைவுகளின் வழியாக பரவலாக அறியப்பட்டவர்.

தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்ற தாமரைச்செல்வி, ஈழ இறுதிப் போர் மற்றும் அவுரஸ்ரேலிய புலப்பெயர்வு குறித்து எழுதிய உயிர்வாசம் நாவல் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் பற்றிய கட்டுரையையும் அதனை உள்ளடக்கியுள்ள ஞானம் இதழையும் வாசகர்கள் வணக்கம் லண்டன் இணையத்தின் சிற்றிதழ் பகுதியில் வாசிக்கலாம்.

இணைப்பு: https://vanakkamlondon.com/online-magazines/2021/05/111272/

இலக்கியச்சாரல் நிரூபர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More