செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் ட்றபிக் ட்றாமசாமிகளே எழுந்து வா | த. செல்வா

ட்றபிக் ட்றாமசாமிகளே எழுந்து வா | த. செல்வா

1 minutes read

என் பள்ளியின் வீதியில்
சரிந்தது ஒரு முல்லை
ஊற்றுப் புலத்தின்
சனித்த பிள்ளை
உறங்காத் தெருவொன்றில்
நீளுறக்கமானது

காலையிலிருந்து
றபிக் றாமசாமிகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்
இதுவரை எந்தச் சாமியும்
எழுந்து வந்ததாயில்லை

நாளை மலரும் சின்னப்பூக்கள்
சிறகறுந்து நிழலாகிப் போகையில்
றபிக் றாமசாமி பற்றி
ஒரு சட்டம் இயற்ற வேண்டுமென
கொக்கரிக்கிறது இந்த ஏழைமனது

கிளைகள் பல விரித்து
நிலையாய் நித்தியங் காண்பவள்
சிலையாய்ச் சிதைந்து
கிளியின் வீதியில்
கிழிகையில் நீதி கள்ள மௌனமானது
நீதிச் சீருடை தரித்தோர்
கள்ளத் தவஞ் செய்தனர்

அன்று யானை நடந்த ஏனையினில்
இன்று எருமைகள் காவலாம்
ஆனதால் காலனும் நெடுகுவாம்

போரின் பின்னும் புரட்சியாளர்கள்
புன்னகைக்க வேண்டும்
இல்லையேல் நாளை மலரும் சின்னப் பூக்கள் யாதுமாவர்
சிறுக வான அவ்வீடு என்ன வாகும்

ஓ! றாம சாமியே எழுந்து வா
இன்றும் எந்நிலம் தீப் பூதங்களின் வாயில்

த. செல்வா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More