செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் லண்டனில் தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் அறிமுக நிகழ்வு

லண்டனில் தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் அறிமுக நிகழ்வு

1 minutes read

ஈழத்து கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வன் எழுதிய பயங்கரவாதி நாவலின் அறிமுக நிகழ்வு எதிர்வரும் ஜூன் மாதம் 24ஆம் திகதி லண்டனில் இடம்பெறவுள்ளது.

வணக்கம் இலண்டன் இணையத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்படும் விசேட நிகழ்வுகளில் ஒன்றான பயங்கரவாதி அறிமுக நிகழ்வு பிரித்தானிவின் பிரமாண்ட அரங்கான Alperton community schoolஇல் இடம்பெறவுள்ளது.

திரள் அமைப்புடன் வணக்கம் இலண்டன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வுக்கு கிளி பீப்பிள் அமைப்பு ஆதரவு வழங்க லண்டன் அபியகம் அனுசரனை வழங்குகின்றது.

நடுகல் நாவல் வாயிலாக உலக அளவில் கவனத்தை பெற்றுள்ள தீபச்செல்வனின் புதிய நாவல் பயங்கரவாதியும் பலதரப்பட்டவர்களாலும் விரும்பி வாசிக்கப்படும் நிலையில் லண்டனில் இந் நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது.

சில மாதங்களின் முன்னர் கிளிநொச்சியில் அரங்கம் நிறைந்த மக்கள் மத்தியில் வெளியிட்டப்பட்ட பயங்கரவாதி நாவல் குறித்த மற்றொரு உரையாடல் நிகழ்வு அண்மையில் நடிகரும் இயக்குனருமான நாசர் தலைமயில் சென்னையில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More