செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் களம் கண்ட மறவன் | கேசுதன்

களம் கண்ட மறவன் | கேசுதன்

0 minutes read

 

காலம் பிறப்பித்த கருவொன்று
களம் காண துணை நின்றாற் போல்
சீறும் கணைகளும் கரை கண்டிடவே
புலி பெயர் புனைந்த பெருமறவர் கூட்டம்
திக்கு திசையறியா சேனையன் படை முறித்து
பேர்கொண்டெழும் எம் அணையான்

காலம் கொடுத்த களம் வென்றிடவே
திசையெட்டும் பறை முழங்கிட
சூரரை போற்றி நின்றான் அவன்
தாய் மண் மீளும் என பகைமுடித்து
எம்மவன் தோள் சாய்வான்

அனல் பறக்கும் காட்டினில் சிசுவை
சுமந்த தாய்போல் நம்மவர் ஏற்றிய
செந்தணல் சுடுகலன் சொல்லும்
செங்கனல் கரிகாலன் பெற்ற
பிள்ளையென

அடவி அதிரும் அவன் போக்கில் ஊடே
செங்கனல் குடிக்கும் வல்நெஞ்சன்
உயிரும்
பிறவாளன் பிதற்றும் கொச்சை தமிழும்
சொல்லவா வேண்டும் பச்சைத்தமிழன்
புகழை
ஓர் அறிவாளன் அறிவான்
எம்துணை நின்ற படைகளின்
உணர்வை

கேசுதன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More