செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் வந்தேறி நான் | வட்டக்கச்சி வினோத்

வந்தேறி நான் | வட்டக்கச்சி வினோத்

0 minutes read

 

என்னை இந்த தேசத்தவன் என அழைக்காதீர்கள்
நான் வந்த கப்பல்
குமரிக்கண்டத்தில் புதைந்துகிடக்கிறது

இலெமூரிய கண்டத்தின் வந்தேறி
முருகனோடு கதிர்காமத்தில்
குடியேறினேன் யாருமற்ற இந்த
குமரிக்கண்ட மிச்சத்தில்

சிறுபான்மை என்றே என்னை அழையுங்கள்
இங்கே வசிக்கும் எறும்புகளை விட நாங்கள் குறைவுதான்

என் நிறத்தைப் பார்த்து என்னை அடையாளம் கண்டு விடுவீர்கள்
அதை மாற்ற எந்த நிறக்கழிம்பும் நான் பூசுவதில்லை
மனதை மாற்றாத மற்றவர்கள் முன்னே எனக்கு நிறத்தை மாற்ற பிடிக்கவில்லை
அதனால் என்னை கறுப்பன் என்றே அழையுங்கள்

இந்த நாட்டை உருவாக்கிய என் முன்னோர்களை மூடிய
புதைகுழிகளில் செழித்து வளர்ந்த
அறுபடையை சுவையுங்கள்
அதில் எங்கள் இரத்தமும் வியர்வையும் மணக்கும்
அதையும் சேர்த்து வந்தேறி என்றே அழையுங்கள்

என்னை சுற்றி ஆக்கிரமித்த
அரசின் அதிகார மரங்கள்
என் உடலை மூடி மறைத்தாலும்
இருக்கும் சிறு துவாரத்தின் ஊடாக
இந்த இலெமூறிய வந்தேறியின் குரல் கேட்க்கும்

வட்டக்கச்சி வினோத்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More