செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் குழந்தைகளின் வானம் | வில்வரசன்

குழந்தைகளின் வானம் | வில்வரசன்

0 minutes read

சிறுவர் தினத்தன்று
குழந்தைகளின் வானத்தில்
சந்தோச விண்மீன்கள்
புதிதாய் முளைத்தன..

கேக்குகள் வரவளைக்கப்பட்டன
பலூன்கள் ஊதப்பட்டன
மின்மினித் துகள்களை
முகங்களில் அப்பி மகிழ்ந்தனர்
குழந்தைகள்

புதிய பாடலொன்றை
உதடுகளில் உமிந்தபடி
சிறுவர்களின் கால்கள்
குதூகலிக்கத் தொடங்கின…

அன்றைய பகலில்
பட்சணங்களாலும்
பரிசுகளாலும் நிரம்பிவழிந்தன
சிறார்களின் சட்டைகள்

மாலையில்
வெறிச்சோடிப்போயிற்று
அவர்களின் வானம்
பலூன்கள் அனைத்தும் வெடித்து
முடிந்தன
கேக்குகள் அனைத்தும் தீர்ந்து போயின
விடைபெற்றுக் கொண்டனர்
மகிழ்ச்சியும் மக்களும்

அடுத்த வருடம்
மீண்டும் நட்சத்திரங்கள் பூக்கும்….!
மீண்டும் குழந்தைகள்
மகிழ்வார்கள்..!

வில்வரசன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More