செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் சக துயரம் | வில்வரசன்

சக துயரம் | வில்வரசன்

0 minutes read

 

காசாவின் நிலவறைகளில்
பதுங்கியிருக்கும்
குழந்தையின் கண்களில்
விரிகின்றது
ஈழத்தின் இறந்தகாலம்

சுடுகலன் முனையில்
குருதியை உறிஞ்சியபடி
முன்னேறும் டாங்கிகளின்
பாதங்களில் நசியும்
முகங்களில் ஒன்றாய்
எனது தோழனின் உருவமும்

கற்களையும் மணலையும்
வீசி எறிந்து
தங்கள் நிலத்தைக் கோரும்
குழந்தைகளை
கவ்விப் போகும் கழுகுகளாய்
போர் விமானங்கள்

துண்டிக்கப்பட்ட ஒற்றைக்கையுடன்
நிலவறையில்
மெழுகின் வெளிச்சத்தில்
போராடும் தன் மகனுக்காய்
ஒலிக்கும்
பெருந்தாயின் பிரார்த்தனை

தோழனே !
காசாவின் துயரம்
என்
கருப்பையின் வரலாறு

வில்வரசன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More