புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் வசந்ததீபன் கவிதை

வசந்ததீபன் கவிதை

1 minutes read
கண்ணீர்  முத்துக்களாக  உதிர்கின்றன
கேவிக்கேவி  மென்னிதழ்கள்  வீங்கின
துரோகியின்  நெஞ்சைக்
கிழிக்க  அந்தஉடல்  துள்ளியது
வயிறுகள்  கூப்பாடு  போடுகின்றன
அடுப்பு  பிணமாய்  குளிர்ந்து  கிடக்கிறது
வெளியே  போனவர்கள்  திரும்பவில்லை
ஏலக்காய்  மணம்  தெருவெல்லாம்  மணக்கிறது
கூட்டம்  கூட்டமாய்  பெண்கள்  போகிறார்கள்
பசியோடு  குடும்பங்களின்    விழிகள்  பூத்திருக்கின்றன
குழந்தை  போல  மழை  பிரியம்  கொஞ்சியது
மனசுக்குள்  குளிர்  கிச்சுக் கிச்சு  மூட்டியது
சூடாக  கொஞ்சம்  தேனீர்  அருந்த  வேண்டும்
மழை  புணுபுணுக்க  ஆரம்பித்தது
அடகு  வச்ச  குடும்பம்  மீளுமா?
உயிர்கள்
வடிந்து  கொண்டிருக்கின்றன
மீட்சி என்ற  உக்கிரச்  சொல்
பறந்து  போய்  விட்டது.
வசந்ததீபன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More