புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் ஒரு நாட் பூ | வில்வரசன்

ஒரு நாட் பூ | வில்வரசன்

0 minutes read

 

பூ மலர்கிறது
இன்னும்
கண்விழிக்கவில்லை இதழ்கள்.
நீரூறிய வேர்கள் தட்டிக்கொடுக்கின்றன மௌனமாய்.
காற்று போர்த்திச்செல்கிறது
பாராட்டுச்சால்வையொன்றை
புது மலருக்கு

பூ புன்னகைகிறது
நறுமணம் பரவுகிறது
கவிஞர்களின் எழுதுகோல்களை
மைக்குப்பிகள் நிரப்பிக்கொள்கின்றன
விரிந்த இதழ்களில் ஆலிங்கணிக்கும்
வண்டுகளின் தேகத்தில் ஒட்டிக்கொள்கிறது நறுமணம்

நேரம் கடக்கிறது
களையிழந்து உதிர்கிறது மலர்
வண்டுகளும் காற்றும் கவிஞர்களும் நினைவு வைத்துகொள்கின்றனர்
மலரின் ஓர் நாளை
அவ்வளவு தான்.

வில்வரசன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More