செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் தெய்வம் கூட மன்னிக்காது | இனியவன்

தெய்வம் கூட மன்னிக்காது | இனியவன்

1 minutes read

எங்களின் கடைசி சத்தம் என்று நினைக்கவும் முடியவில்லை
தொடர்கதையா என்றும் தோன்றவில்லை
ஆனால் என்னவோ அஸ்தமித்து நிட்கின்றோம்
விடியவும் இல்லை எழவும் இல்லை
கிழக்கை நோக்கிய பார்வை ஏக்கங்களாகவே போகின்றது
ஒன்பது ஆண்டுகள் அனாதைகளாக எம் இனம்
அரசியல்வாதிகளோ சந்தோசத்தின் உச்சியை தொட்டு
ஒன்பது வருடங்கள் கழிந்ததை நினைத்து சந்தோசப்பட்டுக்கொண்டிருக்கும்
நிலையில் அரசியலோ அறிவோ இல்லாத தமிழர்களாக நாங்கள்
இலங்கை தீவிலே எல்லா இனத்துக்கும் இறந்தவர்களை நினைவுகூர
இடம் காலம் ஒதுக்கலாம் ஆனால் தமிழினத்துக்கு இயலாது
அரசபயங்கரவாதம் போலவே தமிழ் அரசியல்வாதிகளின்
நாடகமும் இறந்தவர்களை நினைவுகூர இயலாத உங்களால்
அரசியல் மட்டும் தான் நடத்தலாம்
தமிழ் மக்களின் மனதைஉங்களால் புரிந்துகொள்ளமுடியாது
ஆட்சிமாற்றத்தை எதிர்பாத்த எம்மக்களை
அடுத்த தலைவனுக்கான போட்டியில் தோற்றுவிட்டது
அடுத்த கட்சி
சுயநலம் நிறைந்த நீங்கள் எங்கள் மரணித்த மக்களையோ
உயிராயுதங்களையோ ஏமாற்ற நினைக்கலாம்
ஆத்மாக்களை நினைத்து பாருங்கள்
முப்பது வருடங்களாக காவல்காத்த தெய்வங்களை
உங்களின் உழைப்புக்காக்க உயிர்நீத்த மக்களை
உங்களலால் ஏற்றப்படும் தீபம் கூட அணைந்துவிடும்
முள்ளிவாய்க்காலில்
தண்ணீரில் தீபம் எரியும் முள்ளியவளை தெய்வம் கூட உங்களை மன்னிக்காது
உங்கள் அரசியல் நாடகத்தை நடத்துங்கள்
எங்களுக்கான தீபங்கள் எரிந்துகொண்டே இருக்கின்றன
இராணுவமுகாம்களில் பாதுகாப்பாக முள்வேலிக்குள்
புத்தன் குடிகொண்டதாலும் தீபங்கள் எரிகின்றன
நீங்கள் சண்டைபிடிக்கத்தேவையில்லை தீபங்களுக்க்காக
எங்களுக்காக தயவுசெய்து அரசியல் நடத்தாதீர்கள்

-இனியவன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More