செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா

கவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா

0 minutes read

என் குப்பைகளை எங்கே
கொட்டுவது
கப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்
நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்
இந்தக் குப்பைகள் விடுவதாயில்லை
எத்தனை தடவை மறக்கிறோமோ
அத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்
பழைய கோடில்லா கடல் நீராய்
வற்றாத புத்துணர்வு பொங்கிறது
எல்லா மனிதர்களும் கொடுக்க முடியாது கையால்
எல்லா மனிதர்களும் கெடுக்கமுடியாது நெஞ்சால்
எல்லா மனிதர்களும் பேசமுடியாது வாயால்
ஆனால்
சில மனிதர்கள் சிலகணமேனுங்
கேட்க முடியும் காதால்
அல்லது
கேட்பது போல் நடிக்கவும் முடியும்
ஒரு கடல்போல் காதை விரித்துக் கேட்டால்
நான் கப்பல் போல் என் கவலைகளைக் கொட்டிச் செல்வேன்
பிறகு அலை போல் நாம் யாவரும் கரைந்து தெளியலாம்
என்ன செய்ய
என் குப்பைகளைக் கொட்ட யாரொருவர் வந்தாலும்போதும்
என் மனப்பாரங் குறைந்து பல காதஞ் சென்று புதுமனிதனாகிப் புன்னகைப்பேன்
சிக்மன் பிராய்ட்டுகள் தேவையில்லை
யாராவது செவிகளை விரியுங்கள்
நான் கப்பலாகிக் குப்பை கொட்ட

பகல் 3.13
கரவை

த.செல்வா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More