செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் பூக்களில் கந்தகம் இல்லை! | சி.கிரிஷாந்த்ராஜ்

பூக்களில் கந்தகம் இல்லை! | சி.கிரிஷாந்த்ராஜ்

0 minutes read

சில காட்சிகளின்
மீள் நிகழ்தலால்
ஆவேசத்தில்
எதிர்வினையாற்ற
எத்தனிக்கும் நெஞ்சை
தலையில் குட்டிக் குட்டி
அடக்கிக்கொண்டே
இருக்கிறோம்!

சீருடை சூழ்ந்துகொள்ள
அன்றும்
மண்டியிட்டமர்ந்தோம்…
இன்றும்
மண்டியிட்டமர்ந்தோம்…

ஊதுபத்தி…
கற்பூரம்…
வாடுவதற்குள்
நினைவுகூர்ந்து கண்ணீர் சிந்த
கொஞ்சம் பூக்கள்…
வேறெதுவுமில்லை…
வேறெதுவுமேயில்லை!

பூக்களில் கந்தகம் இல்லை…
ஊதுபத்தியில் தோட்டாக்கள் இல்லை…
கற்பூரத்தின் சுவாலை
உங்களை
எரித்துவிடப்போவதுமில்லை…

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More