செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் நள்ளென் யாமம் | க. மோகனரங்கன்

நள்ளென் யாமம் | க. மோகனரங்கன்

0 minutes read


கதலைகொள்ளாது
தறிகெடச் சுழலும்
எண்ணங்களின் வேகத்தை
மட்டுறுத்தும் பித்தான்
இங்கெங்கோதான்
இருக்கிறது ,
இருளில்
கைக்குத் தட்டுப்படவில்லை .
இருப்பு கொள்ளாமல்
படபடக்கும் நினைவின்
பழைய பக்கங்கள்
பறந்து கிழிந்துவிடாதிருக்க ,
கனக்கும்
கண்ணீரின் துளியொன்றை
எடுத்து வைக்கிறேன்
எடைக் கல்லென .

க. மோகனரங்கன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More