செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் என் பாஷைகள் | செல்வி தமிழி

என் பாஷைகள் | செல்வி தமிழி

1 minutes read

நான் பேச நினைத்த நேரங்களில் நீ பேச வில்லை
என் துயரங்களை பகிர நீ இல்லை
என் கனவுகளை சொல்ல நீ இல்லை
என் எதிர்காலம் என்பதில் நீ இல்லை
என் கண்ணீரின் போது நீ இல்லை
என் உணர்வுகளை பகிர நீ இல்லை

நீ யார் நானே கேள்விக்கணைகளைத் தொடுத்து 

கற்பனைக்கு உருக்கொடுத்தேன்
உருவமில்லா உன்னை எடுத்து 

பதில்களையும் நானே தந்தேன்

எப்போதும் நீ யார் என்கையில் 

ஒரு இடைவெளி நிரப்பப்படுகிறது என எண்ணினேன்
பாராங்கல்லாய் மௌனியாகும் உனக்கு உருவெதற்கு

என் பாஷைகள் புரியா உனக்கு எதை விளம்ப?
இந்த இருப்பு என்னகத்தில் இல்லை
எதிலும் இல்லை எனும் போது இந்த உறவெதற்கு

செல்வி தமிழி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More